தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம் நகருக்கு அருகில் உள்ளது தக்கோலம் எனும் ஊர். இங்கு மிக பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி மிகவும் மகிமை வாய்ந்தவர். இவர் தனது தலையை ஒரு பக்கம் சாய்த்தபடி உள்ளார். இதன் தாத்பர்யம் இவர் நமது கோரிக்கைகளை தலை சாய்த்து கேட்பது போல வடிவமைகப்படுள்ளது. மற்ற கோவில்களில் நாம் இவரது சந்நிதியில் நின்று கொண்டே வணங்குவோம் அனால் தக்கோலத்தில் உள்ள இக்கோவிலில் இவரது சந்நிதியில் உட்கார்ந்த நிலையில் தான் நமது கோரிக்கைகளை இவரிடம் சமர்பிக்க வேண்டும்.
என்னை பொறுத்த வரை இவரை நான் வேண்டியது அனைத்தும் மிக நன்றாக நடந்துள்ளது. நீங்களும் ஒருமுறை சென்று உங்களது கோரிக்கைகளை இவரிடம் சொல்லுங்களேன். உங்களுக்கும் இவர் அருளால் நல்லது நடக்கட்டும்.
Friday 25 June, 2010
Subscribe to:
Posts (Atom)